Thursday 2 January 2014

கிரஜுவேசன் கொண்டாட்டம்



முதல் புணர்வில்
உதிரம் காட்டினேன்
ஐந்தாண்டுகளில்
நான்கு ஜீவன்களை ஈன்றேன்
பாராட்டினார்கள்
'பத்தினி' பட்டமும் தந்து.
ஆனால் கடைசி வரை
எனக்கு மட்டும்
'ஆர்கசம்' கிட்டவேயில்லை.

எனக்கும் உச்சம் பெற ஆசைதான்
முயற்சித்தேன்...
கிடைத்தது
ஆர்கசமும்
'வேசி'யென்றக் கிரீடமும்.

இளங்கலைப் பயின்றவர்
மேலும் படித்து
முதுகலைப் பட்டயம்
பெறுவது மட்டும்
மகிழ்ச்சியாயிருக்கிறது!