Wednesday 19 February 2014

தெய்வீக நரகம்

நல்ல வேளை
இந்தப் பலியாடுகள்
கெட்ட மேய்ப்பனால்
இரட்சிக்கப்பட்டன.

கோவில் கிடாவுக்கு
எத்தனை மரியாதை?
விரும்பியதெல்லாம் தின்னலாம்
விரட்டியடிக்க ஆளில்லை
எல்லாம் கொடை நாள் வரைதான்
மஞ்சள் தண்ணி தெளித்ததும்
முச்சு திணருதேயென்று
தலையை ஆட்டினால்
சாமி இறங்கிடும்
யாருக்கும் மனது இரங்காது!

புண்ணியம் செய்தா இவை
கோவிலுக்கு நேரப்பட்டன?
குற்றம் செய்தால்
மாற்றத்திற்காக சிறையில் பூட்டுவர்
குற்றத்தைப் பார்த்ததால்
ஒரு மாறுதலுக்காக
இவர்களுக்குத் தண்டனையா?

பெற்ற தாயின்
வயிரறுத்து
அவதரிக்கவில்லை
அவள் பாலுறுப்பு
வஞ்சிக்கப்பட்டதைப்
கேட்கவும் இல்லை...
பாவம் செய்தா இவை
நரகத்தில் தள்ளப்பட்டன...?

சுவாமிகளின்
நித்ய அவதாரங்களும்
சூழ்ச்சிகளின் கூடாரம்
எழுப்புவதால்
இங்கு தெய்வீக நரகங்களே
மிஞ்சுகின்றன...

சதாமும் லேடனும்
ஏன் பிராய்லரும்
வளர்க்கப்படுவதே
தெய்வீக நரகத்தில்
சிலரின் மோட்ச ஆலாபனைக்காகத்தானே?

இப்படியிருக்க
நல்ல வேளை
இந்தப் பலியாடுகள்
கெட்ட மேய்ப்பனால்
இரட்சிக்கப்பட்டன.

No comments:

Post a Comment